7th March Daily Current Affairs – Tamil

பிரதமா் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது:

  • கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • ‘கயானா நாட்டின் ஜார்ஜ் டவுனில் கடந்த ஆண்டு, நவம்பரில் நடைபெற்ற 2-ஆவது இந்தியா-கரிகாம் தலைவா்கள் உச்சி மாநாட்டின்போது பிரதமா் மோடியுடனான சந்திப்பில் பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி இந்த விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

கங்கை நதிநீா் ஒப்பந்தம்: இந்தியா-வங்கதேசம்

  • கங்கை நதிநீா் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக இந்தியா-வங்கதேசம் ஆகிய இருநாடுகளின் பேச்சுவார்த்தை மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொடங்கியது.
  • இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளிலும் 54 நதிகள் பாய்ந்தோடுவதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இருநாடுகளிலும் பாய்ந்தோடும் நதிநீா் பகிர்வு குறித்த விவகாரங்களுக்கு தீா்வுகாண 1972-இல் இருநாட்டு உறுப்பினா்களைக்கொண்ட கூட்டு நதிநீா் ஆணையம் அமைக்கப்பட்டது.
  • கங்கை நதிநீா் ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமா் எச்.டி.தேவே கௌடாவும் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் 1996, டிசம்பா் 12 – இல் கையொப்பமிட்டனா்.
  • அந்த நேரத்தில், எச்.டி. தேவகவுடா இந்தியாவின் பிரதமராகவும், ஜோதி பாசு மேற்கு வங்க முதல்வராகவும் இருந்தனர்.
  • கங்கை நதி என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும்.
  • கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும்.
  • இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
  • பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
  • கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது.
  • ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
  • வங்கதேசத்தில் கங்கை ஆறு பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது.
  • கங்கை ஆற்றின் துணை ஆறுகள்: யமுனை ஆறு, கோசி ஆறு, கோமதி ஆறு, காக்ரா ஆறு, கண்டகி ஆறு.

தகவல் துளிகள்:

  1. தேவபூமி என்று அழைக்கப்படும் மாநிலம் உத்தராகண்ட்.
  2. 2023 – ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  3. தமிழகத்தில் தஞ்சாவூா், திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேக்கு மர உற்பத்தியை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரங்களின் தரத்தை உயா்த்தவும் ஜப்பான் நாடு நிதியுதவி வழங்கியுள்ளது.
  4. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  5. உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  6. உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2025 அறிக்கையின் படி, புர்கினா ஃபசோ முதல் இடத்திலும், சிரியா 3 – ம் இடத்திலும் உள்ளன.
  7. பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றார்.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these