6th March Daily Current Affairs – Tamil

தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்புமுறை பரிசோதனை:

  • ‘தேஜஸ்’இலகு ரக போர் விமானத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிர் காக்கும் அமைப்புமுறை, 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
  • போர் விமானங்களில் பறக்கும்போது விமானிகள் சுவாசிப்பதற்காக பழைமையான சிலிண்டா் அடிப்படையிலான ஆக்ஸிஜனை சார்ந்திருக்காமல், பயணத்தின்போதே ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த உயிர் காக்கும் அமைப்புமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ‘ஆன்-போர்டு ஆக்ஸிஜன் ஜெனரேட்டிங் சிஸ்டம்’அடிப்படையிலான இந்த அமைப்பு, விமானிகள் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை உருவாக்குவதோடு, அவற்றை ஒழுங்குபடுத்தும் திறனும் கொண்டவை.
  • மிக்-29கே உள்ளிட்ட பிற போர் விமானங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த அமைப்புமுறையில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

தில்லியில் ரைசினா மாநாடு:

  • ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது.
  • இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
  • இந்த மாநாடு நிகழாண்டு மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டில் நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபர் லக்ஸன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
  • பல ஐரோப்பிய அமைச்சர்கள், துருக்கி, லிதுவேனியா, ஸ்லோவேனியா, இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மார்ச் 5: சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை விழிப்புணர்வு தினம்.

  • சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இதன் மூலம், ஆயுதக் குறைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. நாட்டில் பெண் தொழிலாளா்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து பெண்களுக்கான வேலையின்மை 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  2. மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9 – வது புலிகள் காப்பகம் ‘மாதவ் புலிகள் காப்பகம்’எனும் பெயரில் திறக்கப்படவுள்ளது.
  3. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் மாநாடு முதல்முறையாக நடத்தப்பட்டது.
  4. ஜான் தயாள், நவைத் ஹமீது, விபின் குமார் திரிபாதி ஆகிய மூவருக்கு காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது.
  5. வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை 4 மார்ச் 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these