27th February Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் February 27

 

வக்ஃப் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்

  • வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.
  • வக்ஃப் வாரியத்தின் பணிகளை நெறிப்படுத்தவும், வக்ஃப் சொத்துக்களின் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும், வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 மற்றும் முசல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா, 2024 ஆகிய இரண்டு மசோதாக்கள் ஆகஸ்ட் 8, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 இன் நோக்கம் , வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தை திருத்துவதாகும்.
  • திருத்த மசோதா இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த முயல்கிறது.
  • சட்டத்தின் மறுபெயரிடுதல், வக்ஃப்பின் வரையறைகளைப் புதுப்பித்தல், பதிவு செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் வக்ஃப் பதிவுகளை நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரித்தல் போன்ற மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் முந்தைய சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வக்ஃப் வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது .

தொட்டில் குழந்தை திட்டம்:

  • தொட்டில் குழந்தை திட்டம் என்பது தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
  • இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது.
  • இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன.
  • பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் செல்கின்றனர்.
  • இக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுகின்றன.

பிப்ரவரி 27: உலக அரசு சாரா நிறுவனங்கள் தினம்.

  • உலக அரசு சாரா நிறுவனங்கள் தினம், அனைத்து அரசு சாரா மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களையும், சமூகத்திற்கு பங்களிக்கும் அவற்றின் பின்னணியில் உள்ள மக்களையும் அங்கீகரித்து, கௌரவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. ஒடிஸா மாநிலம் சாண்டிபூா் கடற்பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய கடற்படை சார்பில் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது.
  2. சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.
  4. சென்னையில் அம்பத்தூரில் அமைத்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  5. ஆயுஷ் அமைச்சகம், இந்திய பாரம்பரிய மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, மூன்று புகழ்பெற்ற பயிற்சியாளர்களுக்கு நடப்பு ஆண்டிற்கான மதிப்புமிக்க தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகளை வழங்கியது.
  6. கார்பன் சந்தைகள் பற்றிய முதல் சர்வதேச மாநாடு 24 & 25 பிப்ரவரி 2025 இல் புது தில்லியில் நடைபெற்றது.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these