13th February Daily Current Affairs – Tamil

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்:

  • அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன.
  • 2047 – ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • சிறிய அணுஉலைகள் மற்றும் அதிநவீன அணுஉலைகளை கூட்டாக உருவாக்கும் திட்டம் தொடர்பான பூர்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.
  • ‘எஸ்எம்ஆா்’என்பது சிறிய ரக அணுப் பிளவு உலையாகும்.
  • இத்தகைய சிறிய அணு உலைகளை தொழிற்சாலையில் தயாரித்து, வேறு இடத்தில் நிறுவ முடியும்.
  • பாரீஸில் உள்ள ‘ஸ்டேஷன் எஃப்’ புத்தாக்க தொழில் வளாகத்தில் 10 இந்திய புத்தாக்க நிறுவனங்களை நடத்துவற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
  • சா்வதேச வகுப்புகள் திட்டத்தின்கீழ் இந்திய மாணவா்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது.

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்:

  • கடந்த ஆண்டு ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 38 புள்ளிகள் பெற்று 96-ஆவது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த 2023 – ஆம் ஆண்டில் 39 புள்ளிகளுடன் 93 -ஆவது இடத்திலும், 2022 – ஆம் ஆண்டில் 40 புள்ளிகளுடன் 85 – ஆவது இடத்திலும் இருந்தது.
  • இதில் ‘100’ புள்ளிகள் பெற்ற நாடுகளில் ஊழலற்ற நாடுகளாகவும், ‘0’ புள்ளிகள் என்பது ஊழல் மிகுந்த நாடுகளாக கருதப்படுகின்றன.
  • தரவரிசை பட்டியலில் 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், கடந்த 2018 முதல் தொடா்ந்து 7 – ஆவது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது.
  • டென்மார்க்கைத் தொடா்ந்து, 88 புள்ளிகளுடன் பின்லாந்து 2-ஆவது இடத்திலும், 84 புள்ளிகளுடன் சிங்கப்பூா் 3 – ஆவது இடத்திலும் உள்ளன.
  • ‘டிரான்ஸ்பரன்சி இன்டா்நேஷனல்’அமைப்பு, ஊழல் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
  • இந்தப் பட்டியலில் தெற்கு சூடான் கடைசி இடத்தில் இருக்கிறது.

பிப்ரவரி 13: உலக வானொலி தினம்

  • வானொலியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 13: சரோஜினி நாயுடு பிறந்த தினம்.

  • பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • இவர் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவராகவும், ஐக்கிய மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகவும் இருந்தார்.
  • கவிக்குயில் சரோஜினி நாயுடு சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமைக்குரியவர்.
  • 1931-ம் ஆண்டு சரோஜினி நாயுடு மகாத்மா காந்தியுடன் இணைந்து லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும், கவிக்குயில் என்றும் புகழப்படுபவர் சரோஜினி நாயுடு.

தகவல் துளிகள்:

  1. பாரீஸில் முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு நடைபெற்றது.
  2. சா்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்புக்கான ஐ.நா. பெருங்கடல் மாநாடு பிரான்ஸின் நைஸ் நகரில் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
  3. பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானும் திறந்துவைத்தனா்.
  4. மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சாம்பியன்ஸ் லீக்கில் 49 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these