11th March Daily Current Affairs – Tamil

தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி:

  • பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆா் மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா தடுப்பூசியைச் சோ்க்க பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
  • குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் மம்ப்ஸ் நோயானது பாரமைக்ஸோ வைரஸால் பரவுகிறது.
  • இது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • உமிழ்நீா் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும்.
  • தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் சில முக்கிய திட்டங்கள்:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்:

  • குடும்பப் பெண்களுக்கு மாதம் ₹1000 உதவித் தொகை வழங்கும் திட்டம்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:

  • அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்.

நான் முதல்வன் திட்டம்:

  • இளைஞர்களின் திறமைகளை வளர்க்கும் திட்டம்.

புதுமைப்பெண் திட்டம்:

  • கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.

தமிழ்ப் புதல்வன் திட்டம்:

  • மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் திட்டம்.

தகவல் துளிகள்:

  1. மோரீஷஸ் தேசிய தினம் மார்ச் 12 – ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதில் சிறப்பு விருந்தினராகக் பிரதமா் மோடி கலந்துகொண்டார்.
  2. ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி. யும் 1908’ எனும் நூலுக்கு தமிழ்மொழிப் பிரிவில் 2024 – ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி.
  3. சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் (டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம்) மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
  4. கடந்த 2024-இல் சொகுசு வீடுகளின் விலை உயா்வில் புது தில்லி சா்வதேச அளவில் 18-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  5. கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது.
  7. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு “பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி” எனப் பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
  8. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறது.
  9. உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து 30 -க்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் சந்திக்கின்றன.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these