ட்ரோன்களை அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு வெற்றிகரமாக சோதனை:
- ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
- ஆந்திர மாநிலம் கர்னூலில் லேசர் வழிகாட்டுதலில் செயல்படும் 30 கிலோவாட் திறன்கொண்ட எம்கே-2(ஏ) எரிசக்தி ஆயுத அமைப்பை டிஆர்டிஓ பரிசோதனை செய்தது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு, தொலைதூரத்தில் இருந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது.
- அத்துடன் பல ட்ரோன் தாக்குதல்களையும் அந்த ஆயுத அமைப்பு தடுத்து, கண்காணிப்பு சென்சார்களையும் அழித்தது.
இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி:
- இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து 6 நாள்கள் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப் பயிற்சி தன்சானியாவில் தொடங்கியது.
- அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம் (மகாசாகர்) என்பது பிரதமர் மோடியின் புதிய தொலைநோக்குப் பார்வையாகும்.
- இந்தத் தொலைநோக்குப் பார்வையின் விரிவான கட்டமைப்பின் கீழ், முதல்முறையாக இந்தியா மற்றும் 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து தன்சானியாவின் தார்-எஸ்-சலாம் கடற்பகுதியில் கடற்படை கூட்டுப் பயிற்சி தொடங்கியது.
ஏப்ரல் 14: உலக குவாண்டம் தினம்.
- உலக குவாண்டம் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
- உலகெங்கிலும் உள்ள குவாண்டம் அறிவியல் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் பற்றிய பொது விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாட்டம்:
- அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தகவல் துளிகள்:
- இந்திய துணை தூதரகம் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து இரண்டாம் ஆண்டு கலை இலக்கிய மாநாட்டை இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்தியது.
- தமிழல் அமுக்கிரா வடமொழியில் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் மூலிகை மருத்து செடி குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக, மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
- இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி.
- திருவள்ளூரில் இயற்கை வேளாண் பொருள் கண்காட்சி தொடங்கியது.
- ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவர் பிரிவில் ஜெர்மன் வீரர் லுகாஸ் மார்டென்ஸ் புதிய உலக சாதனை படைத்தார்.
- அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி வென்றுள்ளது.
- இப்போட்டியில் கலப்பு அணிகள் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா-ரிஷப் யாதவ் இணை, சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.