நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு:
- மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58 – ஆக உயா்ந்துள்ளது.
- மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவை, நாட்டின் 58-ஆவது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் அறிவித்தார்.
- இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்கள் 1973 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டன.
- அவை இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி:
- இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 12 – வது பதிப்பு கஞ்சர்-XII மார்ச் 10 முதல் மார்ச் 23 வரை கிர்கிஸ்தானில் நடைபெற உள்ளது.
- 2011 – இல் தொடங்கப்பட்டதிலிருந்து, Ex KHANJAR XII வருடாந்திர பயிற்சி நிகழ்வாக உருவெடுத்துள்ளது.
- இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியான ‘கஞ்சர்-XII’- க்கு இந்திய ராணுவக் குழு புறப்பட்டது.
- இதே பயிற்சியின் கடைசி பதிப்பு ஜனவரி 2024 – இல் இந்தியாவில் நடத்தப்பட்டது.
மார்ச் 10: CISF நிறுவன தினம்.
- இந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைகளை (CISF) கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 ஆம் தேதி CISF நிறுவன தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.
- மேலும் இந்த ஆண்டு 56 வது நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
- அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்து வைத்தார்.
- பெண்கள் அதிகாரமளிப்பதில் பங்களித்ததற்காக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் யசோதா சண்முகசுந்தரத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஔவையார் விருதை வழங்கினார்.
- உலகின் மிகச் சிறந்த பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இளையராஜா சிம்பொனியை அணைமையில் அரங்கேற்றினார். இதன்மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.
- கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
- கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3 – வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.