இந்தியா–கத்தார் 7 ஒப்பந்தங்கள்:
- இந்தியா-கத்தார் இடையிலான நல்லுறவை உயா்த்துவதற்கான ஒப்பந்தம் உள்பட ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
- இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு மற்றும் நிதி முறைகேடுகள் தடுப்பு தொடா்பாக திருத்தப்பட்ட ஒப்பந்தமும் கையொப்பமானது.
- இவை தவிர, பொருளாதார கூட்டுறவு, ஆவணக் காப்பகத் துறை ஒத்துழைப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு உள்பட மேலும் ஐந்து புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
- திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு ஆகியவை கத்தாரில் இருந்து இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளாகும். எத்திலீன், புரோபலீன், அமோனியா, யூரியா போன்ற பல்வேறு ரசாயனங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவையும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
- கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி.
பிஎம்ஸ்ரீ பள்ளி’ திட்டம்:
- தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ‘பிஎம்ஸ்ரீ பள்ளி’ திட்டத்தில் கையொப்பமிடாததால் நிகழ் கல்வியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ 2,152 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை.
- பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டம் என்பது, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.
- இத்திட்டத்தின் மூலம், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
- இந்தத் திட்டத்தில், பள்ளிகள் முன்மாதிரியான பள்ளிகளாக ஆவதற்கு ஆதரவாக போட்டியிடுகின்றன.
- இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள், மாணவர் நலன் சார்ந்த உதவி திட்டங்கள், பள்ளி வளர்ச்சி காண திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- இத்திட்டம், வளரும் இந்தியாவிற்கான, பிரதமரின் பள்ளிகள் (PM SHRI) என்றும் அழைக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- திருச்சி, மதுரையில் ரூ 717 கோடியில் புதிதாக டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் சமூகநலத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா வருகின்ற பிப்ரவரி 21 ல் நடத்தப்படவுள்ளது.
- முக்கியமான மற்றும் மூலோபாய தாதுக்கள், மேம்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியாவும் அமெரிக்காவும் மூலோபாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாற்றும் உறவு (TRUST) முயற்சியைத் தொடங்கியுள்ளது.
- சீனாவின் ஆழ்கடல் ‘விண்வெளி நிலையம்’ 2030-ல் அமைக்கப்பட உள்ளது.
- வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது சீசன், பாகிஸ்தானில் தொடங்குகிறது.